Friday 22 June 2018

புனித மகதலா மரியா

      இயேசுவின்மீது மிகுந்த அன்பும் பாசமும் பற்றும் கொண்டவர். என் ஆண்டவரை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர் என்று கூறி கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தவர். உயிர்த்த இயேசுவை முதன் முதலில் கண்டவர். இயேசுவின் உடலுக்கு நறுமணத் தைலம் பூசியவர். ஆண்டவரை வாஞ்சையோடு தேடி அவரை கண்டடைந்தவரே புனித மகதலா மரியா. இவர்  கலிலேயாவில் கெனசரேத்துச் சமவெளியின் தெற்கு பகுதியில் மகதலா என்ற நகரில் பிறந்தவர். இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டினார். இயேசுவின் இறையாட்சி பணியில் மகதலா மரியா உடன் இருக்கிறார்.  இயேசு சிலுவையில் அறையப்பட்ட போதும் உடனிருந்தார். இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்த பிறகு ஓய்வு நாள் முடிந்ததும் அவருடைய உடலில் நறுமணத் தைலம் பூச யாக்கோபின் தாய் மரியா மற்றும் சலோமி ஆகியோருடன் சென்றார்.                        

                        

No comments:

Post a Comment