Monday 11 June 2018

புனித பர்னபா

   கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு கிறிஸ்துவை பின்பற்றியவர். தனது உடமைகளை விற்று ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க திருத்தூதர்களிடம் ஒப்படைத்தவர். துன்பத்தில் வாழ்ந்த எண்ணற்ற மக்களுக்கு கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகள் வழியாக ஆறுதல் கூறியவரே புனித பர்னபா. இவர் பவுலின் தூதுரை பயணங்களில் துணையாக பணியாற்றினார்.

    பர்னபா புதிதாக சரியா அந்தியோக்கியாவில் நிறுவப்பட்ட திருச்சபைகளுக்கு தலைமையேற்று மக்களை வழிநடத்தினார். இறைவாக்கினராகவும், போதகராகவும் பணியாற்றினார். கிறிஸ்துவின் துன்பப்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை அகிலமெங்கும் அறிவிக்க ஆர்வம் கொண்டார். ஒவ்வொரு நாளும் நற்செய்தி அறிவிக்க உற்சாகத்துடன் செயல்பட்டார். திருச்சபை மக்கள் கிறிஸ்துவை சொந்தமாக்க அனைவரையும் ஊக்குவித்தார். சைப்பிரஸ் நகரில் நற்செய்தி அறிவித்த தருணத்தில் 64ஆம் ஆண்டு பர்னபா கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment