Sunday 25 October 2020

புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான்

  


புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் உரோமை நகரில் செல்வந்த குடும்பத்தில் 3ஆம் நூற்றாண்டு பிறந்தனர். சமூகத்தில் மதிப்பும், மாண்பும், செல்வாக்கும் பெற்றவர்கள். இறைவன்மீது அன்புகொண்டு விவிலியம் வாசித்து இறையனுபவம் பெற்றனர். செபம், ஒறுத்தல், உழைப்பு, வழியாக இறையன்பின் சுடர்வீசினர். கிறஸ்துவை ஒப்பற்ற செல்வமாக ஏற்றுக்கொண்டனர். பிரான்ஸில் பாதணி தயாரிக்கும் மக்கள் மத்தியில் இறைபணி செய்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அடிமைகளுக்கும் உதவினர். மாக்சிமியான், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களை வெறுத்து, கொடூரமாக துன்புறுத்தினான். பாதணி செய்து விற்றுக்கொண்டு கிறிஸ்துவை போதித்து வந்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினர். எங்களது வாழ்க்கை கிறிஸ்துவுக்கே. கிறிஸ்துவுக்காக இறப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறியபோது இருவரையும் தலைவெட்டி கொன்றனர்.

 கிறிஸ்துவின் வார்த்தையை தினந்தினம் வாசித்து     கிறிஸ்துவின் அரும்முகம் தினந்தினம் தியானிப்போம் ”!.

No comments:

Post a Comment