Friday 23 October 2020

புனித யோவான் கப்பிஸ்திரான்

               

      புனித யோவான் கப்பிஸ்திரான் இத்தாலி நாட்டில் 1386ஆம் ஆண்டு øன் 24ஆம் நாள் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்தபோது தாயின் அரவணைப்பில் இறைபக்தியில் வளர்ந்தார். சட்டம் படித்து இறைஞானம் மிகுந்தவராக நேப்பிள்ஸ் அரசர் லடிஸ்லாஸ் பெருஜியாவின் ஆளுநராக பணி செய்தார். உலக இன்பங்களை துறந்து பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து மறைப்பணியாளராகப் பணியாற்றினார். 1425ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று, இறையன்பை உலகிற்கு அறிவித்தார். ஓய்வின்றி ஆன்மாக்களின் மீட்பிற்காக இடையராது போதித்த சிறந்த மறையுரையாளர். ஒருமுறை ப்ரெசியா என்ற இடத்தில் 1,20,000 மக்கள் இவருடைய மறையுரையைக் கேட்டனர். இயேசுவின் பெயரால் சிலுவை அடையாளம் வரைந்து நோயாளிகளைக் குணப்படுத்திய யோவான் கப்பிஸ்திரான் 1456ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் ஆண்டு இறந்து, 1690ஆம் ஆண்டு புனிதரானார். இவர் நீதிபதிகளின் பாதுகாவலர்.

      இறைவனின் அன்பை உலகில் நாளும்அறிவித்து இறைபணி வழி ஆன்மாக்களை நாளும் மீட்போம்

No comments:

Post a Comment