Friday, 29 December 2017
அன்னை மரியா
புனித குழந்தை இயேசுவின் தெரசா சிறுவயதில் தன் தாயை இழந்தார். அன்னை இறந்தபின் அக்காவின் கண்காணிப்பில் வளர்ந்தார். தெரசா நோயுற்ற தருணத்தில் அம்மா! அம்மா! என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார். தோட்டத்திலிருந்த அன்னை மரியாவின் திருசொரூபத்தை நோக்கித் திரும்பினார். இவ்வுலகில் எந்த உதவியும் பெற இயலாத தெரசா, அன்னை மரியாவிடம் சரண் அடைந்தார். தன்மீது இரக்கம் காட்டும்படி முழுஇதயத்தோடு மன்றாடினார். உடனடியாக அருள் நிறைந்த அன்னை மரியா அவருக்குக் காட்சி கொடுத்தார். அவரது அன்பையும், அருளையும் வெளிக் கொணர்ந்து புன்னகைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment