Friday, 15 December 2017
புனித லூசியா
தூய்மையான உள்ளம் உடையோர் இறைவன் வாழும் ஆலயம் என்றுகூறி தூய்மைக்கு சான்றாக வாழ்ந்தவர். செல்வந்த குடுமம்பத்தில் பிறந்தவர். கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு அவரது ஏழ்மையை பின்பற்றி அவருக்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்தவர். மறைசாட்சிகளின் வாழ்கையை கேட்டு தெரிந்துகொண்டவர். கிறிஸ்துவுக்காக எத்துன்பங்களையும் துணிவுடன் ஏற்றுக்கொண்டவரே புனித லூசியா. இவர் இத்தாலியில் சிராக்யுஸ் என்னும் இடத்தில் 283ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.
செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையான வாழ்வை விரும்பினார். ஏழை எளிய மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தனது பெரும் செல்வத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். தனது கற்பை கிறிஸ்துவுக்கு அர்ப்பணம் செய்து வாழ்ந்தார். இத்தருணத்தில் அவரது பெற்றோர் அவருக்கு ரிருமண ஏற்பாடு செய்தனர். லூசியா திருமணம் செய்து கொள்ள மறுத்தார். தனது இவ்வுலக வாழ்வு கிறிஸ்துவுக்கு மட்டுமே உரியது என்பதில் உறுதியுடன் இருந்தார்.
காவலர்களால் லூசியாவை கொலைக் களத்திற்கு அழைத்து செல்ல இயலவில்லை. ஆளுநனின் ஆணைப்படி லூசியாவை சுற்றிலும் விறகுக் கட்டைகளை அடுக்கி தீ மூட்டினார்கள். நெருப்பு லூசியாவை நெருங்கவில்லை. இறுதியாக 304ஆம் ஆண்டு லூசியாவை வாளுக்கு இரையாக்கினர். இவ்வாறு கிறிஸ்துவுக்காக லூசியா வீர மரணம் அடைந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment