இயேசுவின் நெருங்கிய நண்பர். மார்த்தா, மரியா இவர்களின் சகோதரன். இறந்து நான்கு நாட்களுக்கு பிறகு இயேசு இவரை உயிருடன் எழுப்பினார். இயேசுவினால் அதிகம் அன்பு செய்யப்பட்டவரே புனித இலாசர். இவர் எருசலேம் அருகிலுள்ள பெத்தானியா என்ற ஊரில் பிறந்தவர். இலாசர் என்பதற்கு, “கடவுள் உதவி செய்கிறார்” என்பது பொருள் இயேசுவின் போதனைகளை ஏற்று அதன்படி வாழ்ந்து வந்தார்.
இயேசுவுடன் நெஞ்சுருக பேசினார். அவரோடு தோழமை உறவுகொண்டார். தனது 30ஆம் வயதில் நோயுற்றார். இத்தருணத்தில் அவரது சகோதரிகள் மார்த்தா, மரியா இயேசுவை அழைத்துவர ஆள் அனுப்பினார்கள். இயேசுவால் வரமுடியவில்லை. அதற்குள் இலாசர் இறந்துவிட்டார். இலாசர் இறந்து நான்கு நாள்கள் ஆயிற்று. கல்லறையின் அருகில் சென்று, “இலாசரே வெளியே வா” என்றுகூறி இயேசு இலாசரை உயிருடன் எழுப்பினார். மூவொரு இறைவனின் அன்பை வெளிப்படுத்தி வாழ்ந்த இலாசர் 60ஆம் வயதில் இறந்தார்.
No comments:
Post a Comment