Wednesday, 31 January 2018
புனித தொன் போஸ்கோ
சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற வாஞ்சையோடு அனைவரையும் தனது அன்பினாலும், சேவையினாலும் காந்தம்போல் கவர்ந்திழுக்கும் ஆற்றலும், வல்லமையும் நிறைந்தவர். யாரையும் தண்டிக்காமல் அனைவரிடமும் அன்பும் கனிவும், கரிசனையும் காட்டியவர். அசைக்க முடியாத இறைநம்பிக்கையால் தனது குருத்துவ வாழ்வைக் கட்டியெழுப்பியவர். வாழ்நாள் முழுவதும் தான் சந்தித்த மக்களுக்கு இறையன்பை ஊட்டி வளர்த்தவர்தான் புனித தொன் போஸ்கோ. இவர் வட இத்தாயில் பெச்சி என்ற இடத்தில் 1815, ஆகஸ்ட் 16ஆம் நாள் பிறந்தார்.
குழந்தைப்பருவத்தில் தாயின் வழிகாட்டுதலால் ஒழுக்கத்திலும், ஆன்மீகத்திலும், இறைநம்பிக்கையிலும் வளர்ந்து புனிதத்தில் சிறந்து விளங்கினார். கயிற்றில் மிக எளிதாக நடந்தார். சகமாணவர்களின் மத்தியில் நகைச்சுவை நாயகனாகவே வலம் வந்தார். ஏழைகளிடம் அன்பு கொண்டு, அவர்களுக்கு உதவி செய்தார். தூய்மையான வாழ்க்கையால் இறைவனை மாட்சிமைப்படுத்தினார். தொன்போஸ்கோ தூய ஆவியின் தூண்டுதலால் குருவானவராகப் பணியாற்றினார். தினந்தோறும் சிறைச்சாலைகளைச் சந்தித்தார். பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறார்களையும், இளைஞர்களையும் ஒன்று திரட்டி பராமரித்து வந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment