Friday, 26 January 2018
புனித மார்ட்டீன்
கிறிஸ்துவைத் தனதாக்கிட இராணுவப் பணியைத் துறந்தவர். ஏழ்மை கோலம் பூண்டு துறவியாக மாறியவர். எளியவரில் எளியவராக, ஏழைகளின் நண்பராக வாழ்ந்தவரே புனித மார்ட்டீன். இவர் கி.பி. 316ஆம் ஆண்டில் பிறந்தவர். இராணுவத்தில் இணைந்து படைத்தலைவனாக மாறிய மார்ட்டீன் தனது பணியாளர்கள் அனைவரிடமும் நண்பராகவே பழகினார். கிறிஸ்தவப் போர்வீரர்களிடம் நெருங்கிப் பழகினார். மார்ட்டீன் சில நாட்களுக்குப் பின் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார்.
இயேசு கிறிஸ்துவைத் தனது தலைவராகவும் நண்பராகவும் ஏற்றுக் கொண்டார். ஓய்வு நேரங்களில் ஆலயத்திற்குச் சென்று இயேசுவிடம் உரையாடவும், இறைவார்த்தையைத் தியானிக்கவும், செபிக்கவும் ஆர்வம் காட்டினார். அந்நாட்களில் பாலஸ்தீனத்திருந்து திருத்தலப் பயணிகளாக சிலர் வந்தனர். அவர்கள் காடு, மலைகளில் செபம், அமைதி, தியானம், வேலைகள் பல செய்து கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து, துறவிகளாக வாழ்ந்தவர்களைச் சந்தித்தார். தானும் துறவியாக மாறிட ஆவல் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment