அன்னை மரியாவை வாழ்வின் துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும். அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்கின்றபோது மரியா கிறிஸ்துவின் அன்னை ஆடையாக அணிவித்து வழிநடத்துவார். எல்லா மக்களும் கிறிஸ்துவை பின்பற்ற வழிகாட்டுவார். செபமாலை ஆண்டவரிடமிருந்து நமக்கு வரங்களைப் பெற்றுத்தரும். மரியாளுக்கு சொல்லப்படும் செபங்களில் அழகானதும் வளமையானதும் செபமாலையே. அது கடவுளின் தாய் மரியாவின் உள்ளத்தைத் தொடும் செபம். அன்னை மரியாவின் கரம்பிடித்து கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல், பக்தி, இரக்கம் ஆகியவற்றைத் தனதாக்கி, இறையாட்சி பணிகளைச் செம்மையாக செய்து புனிதராக மாறுவோம்.
No comments:
Post a Comment