புனித தாமசின் அருளப்பர், “மரியா இல்லாத சூழலில் நோயுற்றோர் கண்ணீரால் தம் படுக்கையை நனைக்கின்றனர். எனவே இத்தகைய அவலநிலை நீங்க வேண்டுமாயின் செபமாலை வழியாக மரியன்னையைக் கூப்பிடுங்கள்” என்கிறார். அன்னை மரியா இவ்வுலக வாழ்விலும் விண்ணக வாழ்விலும் நமக்கு துணையாக வரக்கூடியவர். எல்லா புனிதர்களுடைய வாழ்வில் அன்னையின் அருட்கரமும் வழிநடத்தலும் அரவணைப்பும் இருந்தது. நமது இதயம் அன்னையிடம் அர்ப்பணிக்கவேண்டும். காரணம் அன்னையிடம் கொடுக்கின்றபோது இதயத்திலுள்ள பாவ மாசுகளை அகற்றி இறையன்பால் நிறைத்து தருவார்.தூய்மையான இதயத்தில் இறைவன் குடிக்கொள்வார்.
No comments:
Post a Comment