Thursday, 22 February 2018

மரியா உடன்படிக்கைப் பேழை


 
          புதிய உடன்படிக்கையின் அடையாளமாக தாழ்ச்சியால் அணி செய்யப்பட்ட அன்னை மரியா திகழ்கிறார். "உடன்படிக்கைப் பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன." (எபிரேயர் 9:4) புதிய உடன்படிக்கைப் பேழையான அன்னை மரியாவிடம் வானத்தில் இருந்து பொழியப் பட்ட உணவாகிய மன்னாவைக் கொண்ட பொற்சாடிக்கு நிகராக, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வுதரும் உணவாகிய" (யோவான் 6:51) இயேசுவைத் தாங்கிய கருப்பை மரியாவிடம் இருக்கிறது. 




           மரியா உடன்படிக்கைப் பேழை. "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொலோசையர் 1:20) என்பதால், இயேசுவே மனிதகுலத்தோடு தந்தையாம் கடவுள் செய்துகொண்ட புதிய உடன்படிக்கையாகத் திகழ்கி றார். எனவே, இயேசுவைக் கருத்தாங்கிய அன்னை மரியா 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைக்கப்படுகிறார். புதிய உடன்படிக்கையில் கிறிஸ்து இயேசு போதித்த அன்பே ஆதாரமாக விளங்குகிறது. இந்த அன்பின் உடன்படிக்கையை உலகிற்கு கொண்டுவந்த பேழையாக அன்னை மரியா திகழ்கிறார்.


No comments:

Post a Comment