Monday, 23 October 2017
புனித அந்தோனி மரிய கிளாரட்
மரியா என் தாய், என் பாதுகாவலி, என் எஜமானி, என் வழிகாட்டி,என் ஆறுதல், என் பலம், என் அடைக்கலம் என்றுகூறி அன்னையிடம் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர். இறைவனின் மாட்சிக்காகவும், அயலானின் மீட்புக்காகவும், விசுவாசிகளின் நல்வழிகாட்டியாகவும் மாறியவர். இறைவார்த்தையில் ஆழ்ந்த பற்றும், இறைவார்த்தை வழியாக தான் யார் என்பதையும், எதற்காக வாழவேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்து இறைவனின் திருவுளம் நிறைவேற்றியவரே புனித அந்தோனி மரிய கிளாரட். இவர் ஸ்பெயின் நாட்டில் கட்டலோனியா என்னும் இடத்தில் 1807ஆம் ஆண்டு நெசவு தொழிலாளியின் மகனாகப் பிறந்தார்.
கிளாரட் சிறுவயது முதல் இறைபக்தியில் வளர்ந்தார். ஓய்வு நேரங்களை நன்கு பயன்படுத்தினார். தினந்தோறும் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கேற்றார். என்னுடைய இதயத்தில் இயேசு எப்போது வருவார் என்று தன்னிடம் கேட்டுக்கொள்வார். கறைபடாத, களங்கமற்ற உள்ளத்தோடும், பக்தியோடும் தனது பத்தாம் வயதில் முதல் முறையாக நற்கருணை நாதரை தனது இதயத்தில் ஏற்றுக்கொண்டார். “இயேசுவே நீர் என்னை ஒரு புனிதனாக மாற்றும்” என்று செபித்தார். பக்தியும் புத்தியும் மிகுந்த கிளாரட் இறைவன் தன்னை அழைப்பதை உணர்ந்து கொண்டார். இறைவனுக்காக இறையாட்சி பணி செய்யவும், கர்த்தூசியன் துறவியாகும் எண்ணத்துடன் பார்சலோனாவை விட்டு கிளம்பி விக் என்ற இடத்தில் இருந்த மடத்தில் 1826ஆம் ஆண்டு சேர்ந்தார். 1835ஆம் ஆண்டு ஜøன் 13ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment