Saturday, 10 November 2018

புனித பெரிய சிங்கராயர்

 
      ஆண்டவரே, உமது சிலுவையானது ஆசீர் அனைத்திற்கும் ஊற்று,  அருள் வரங்களின் உரைவிடம், விசுவாசிகள் பலவீனத்தில் பலம் அடைகிறார்கள் என்று கூறியவர். திருச்சபையின் ஒழுங்குமுறைகளை நிலைநிறுத்துவதில் கடுமையாக உழைத்தவர். திருச்சபைக்கு எதிராக எழுந்த தப்பறைகளை தகர்த்தவர். உலகின் ஒளியான கிறிஸ்துவை வாழ்வின் வழியில் நடந்தவர். புனித பேதுருவின் குரலாக திருச்சபையில் பணியற்றியவரே புனித பெரிய சிங்கராயர்.

       பெரிய சிங்கராயர் டஸ்கனி நாட்டில் பிறந்தவர். இறையனுபவமும், இறைஞானமும், அறிவுகூர்மையும், நற்பண்புகளும் நிறைவாக பெற்ற இறைமனிதர். மனத்திடனும், உடல்வலிமையும், தூய ஆவியின் அருள்பொழிவு பெற்றவர். 440ஆம் ஆண்டு திருத்தந்தையாக திருப்பொழிவு பெற்றார். திருச்சபையில் ஒற்றுமை நிலவிட அயராது உழைத்தார்.

       ஒருமுறை அற்றில்லா என்பவர் ஏழு இலட்சம் எதிரிகள் இத்தாலி மற்றும் ரோம் நாட்டின் மீது படையொடுத்து வந்தார். அத்தருணத்தில் திருத்தந்தை பெரிய சிங்கராயர் எதிரிகளை எதிர் கொண்டு போரில் வெற்றிப் பெற்றார். தவறுகளை துணிவுடன் எடுத்துரைத்தார். நற்கருணை ஆண்டவரின் முன்னில் அடைக்கலம் தேடினார். அன்னை மரியாவிடம் தன்னை அர்ப்பணம் செய்து திருச்சபை சிறந்த முறையில் வழி நடத்தினார்.  இறைவனையும் திருச்சபைûயும் அளவில்லாமல் அன்பு செய்த பெரிய சிங்கராயர் 461ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை 14ஆம் ஆசிர்வாதப்பர் இவரைத் திருச்சபையின் மறைவல்லுநர் என்று அறிவித்தார்.

No comments:

Post a Comment