Tuesday, 28 August 2018

புனிதஅகுஸ்தினார்

     “நீங்கள் இறைவனை உணமையாகவே அன்புசெய்தால் அவ்வாறே அனைத்து ஆன்மாக்களையும் இறைவனையும் அன்பு செய்ய இயலும். அதற்காக உங்களால் முடிந்த அனைத்து நற்செயல்களையும் செய்வீர்கள்” என்று கூறியவர். “ஆண்டவரே எனக்கு கற்பு என்னும் புண்ணியத்தை தாரும்; ஆனால் சிறிது காலம் தாழ்த்தித் தாரும்” என்று செபித்தவர். இறைவனின் அன்பும், அருளும் பெற்று ஆன்மாக்களின் மீட்புக்காக இறயாட்சி பணி செய்தவரே புனிதஅகுஸ்தினார். இவர் 354ஆம் ஆண்டு வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள காஸ்தே என்னும் இடத்தில் பிறந்தார்.  தனது இளமைப் பருவத்தை தவறான போதனையிலும், ஒழுக்கமற்ற நடத்தையிலும் அமைதியின்றி வாழ்ந்தார். தன் தாய் மோனிக்காவின் இறைவேண்டலினால் மனந்திரும்பினார். பின்னர் இறைநூலைப் படித்தும், தன் தாயின் விருப்பப்படியும் இறைவழியில் சென்றார். தாயின் இறைவேண்டுதலால் மனமாற்றம் அடைந்தவர்.


   மிலானில் மனந்திரும்பிய இவர், 387 ஆம் ஆண்டில், மிலான் ஆயர் அம்புரோசியாரிடம் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் தம் சொந்த நாட்டிற்கு திரும்பி வந்து கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். தனது 42 ஆம் வயதில் ஹிப்போ என்றழைக்கப்படும் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 34 ஆண்டுகள்  எடுத்துக்காட்டான வாழ்வை வழங்கினார். ஏராளமான மறையுரைகளாலும், நூல்களாலும் மக்களை பயிற்றுவித்தார். ஏறக்குறைய 100 நூல்களுக்கும் மேல் எழுதினார். அவற்றைக் கொண்டு தம் காலத்தில் நிலவிய தவறான கருத்துக்களுக்கு எதிராக இடையறாது போராடினார். திறம்பட திருமறையை தெளிவுபட எடுத்துரைத்தார்.  அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தவர். அகுஸ்தினார், “ஒரு மனிதரின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்று கூறினார். இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சியினால் மரியாவின் கன்னித்தன்மை ஒருபோதும் குறைந்துவிடவில்லை. அகுஸ்தினார், “மரியா இயேசுவை ஈன்றெடுப்பதற்கு முன்னும்; ஈன்றெடுத்தப் போதும்; ஈன்றெடுத்தப் பின்னும் கன்னியாவே இருந்தார்” என்று கூறினார். 340ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 28ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment