Thursday, 16 August 2018

ஆகஸ்ட் 15 . புனித தார்சிசியுஸ்

   கிறிஸ்துவின் நற்செய்தியை மையப்படுத்தி புனிதமான வாழ்க்கை வாழ்ந்தவர். ஓய்வு நேரங்களில் கிறிஸ்தவ முதியோர்களிடம் சென்று மறைசாட்சிகளை கேட்டு தெரிந்துக்கொண்டவர். நற்கருணையின் மீது அளவு கடந்து அன்பும் பக்தியும் கொண்டிருந்தவரே புனித தார்ச்சியுஸ். இவர் உரோமையில் மூன்றாம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது காலத்தில் உரோமை பேரரசர் டயோக்ளியஸின் கிறிஸ்தவ மக்களை மிகக்கொடூரமான முறையில் துன்புறுத்தினார். டயோக்ளியாசுக்கு அஞ்சி குகைகளிலும், சுரங்கங்களிலும் ஒளிவீசும் தீபங்களாக வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கு தார்சிசியுஸ் நற்கருணை கொண்டு கொடுப்பது வழக்கம். 

      கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. பெரும் சூறாவளி போன்று உரோமைப் பேரரசு முழுவதும் கலகம் ஏற்பட்டது. எண்ணமற்ற மக்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தார்சிசியுஸ் மறைமுகமாக நடைப்பெற்ற நற்கருணை வழிபாட்டில் கலந்துக்கொண்டார். வழிபாடு முடிந்ததும், “சிறையில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அதன்படி காவலர்களின் கண்களில் பட்டுவிடாமல் நற்கருணையைக் கொண்டு செல்ல இன்று யார் தயாராக இருக்கிறீர்கள்?” என்று குருவானவர் கேட்டார். உடனே 12வயது நிரம்பிய தார்சிசியுஸ் கரம் உயர்த்தினார். குருவானவர் ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்தார். தார்சிசியுசிடம் “உன்னால் முடியுமா?” என்று கேட்டார். தார்சிசியுஸ் உறுதியுடன் பதில் அளித்ததால் அவரிடம் நற்கருணை கொடுத்துவிட்டார். இவர் நடந்து சென்றபோது, எதிரிகளின் கையில் சிக்கினார். “என்ன மறைத்துக் கொண்டு வருகிறாய்?” என்று அவர்கள் கேட்டார்கள். முதலில் மறுத்த தார்சிசியுஸ் பிறகு தான் நற்கருணை கொண்டு வருவதாகக் கூறினார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேதவிரோதிகள் “அந்த அப்பத்தை எங்களுக்கு தா” என்று கோபத்துடன் கேட்டார்கள். தார்சிசியுஸ் அவர்களிடம் கொடுக்க மறுத்துபோது அவரை தடியால் அடித்தனர். தலையில் ஏற்பட்ட காயத்தால் சுயநினைவு இழந்து கீழே விழுந்தார். அவ்வழியாக கிறிஸ்தவ படைவீரர் ஒருவர் அங்கு வந்தார். கீழே மயங்கி கிடந்த தார்சிசியுவை தூக்கினார். அப்போது அவரிடம் நற்கருணை ஒரு சிமிழில் முத்திரை வைக்கப்பட்ட நற்கருணை. ஆண்டவரின் திருவுடலை சுமந்து சென்ற தார்சிசியுஸ் ஆண்டவரின் உடலை காக்க ஆகஸ்ட் 15ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment