Monday, 19 July 2021

🔹ஜூலை -18🔹 புனித ஃபிரட்ரிக்

புனித ஃபிரட்ரிக் 780இல் ஃபிரிஸ்லாந்தில் பிறந்தார். இறையன்பில் வளர்ந்து திருநூல் படிப்பின்மீது ஆர்வம் கொண்டு உட்ரெக்ட் நகருக்கு சென்றார். ஆயர் ரிக்ஃபிரிட் கரங்களால் குருவானார். வால்செரன் பகுதியில் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவின் விழுமியங்களையும் நலம்தரும் நற்செய்தியையும் போதித்தார். சமூகத்தில் நிலவிய தவறுகளையும் ஒழுக்கமற்றவர்களின் வாழ்வையும் சுட்டிகாட்டினார். இதனால் மக்களின் எதிர்ப்பை சந்தித்தார். 

   ஃபிரட்ரிக் 816ஆம் ஆண்டு உட்ரெக்ட் மறைமாவட்ட ஆயரானார். 829இல் மைன்ஸில் நடந்த ஆயர் மன்றத்தில் கலந்துக்கொண்டு இறைஞானம் மிகுந்த வார்த்தைகளை பேசினார். இவரது பணிகளை விரும்பாதோர் இவர்மீது பொய்குற்றம் சுமத்தியபோது இறையருளால் அமைதி காத்தார். 388, ஜூலை 18ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றி கடவுளுக்கு நன்றி கூறியபோது எதிரிகள் இரண்டு போர் அவரை வெட்டி கொலை செய்தனர்.                                          

No comments:

Post a Comment