உகாண்டாவில் கிறிஸ்துவின் அரசாட்சி நிலவிட ஏராளம் மறைபணியாளர்கள் தங்களை அர்ப்பணித்தனர். 1884, முத்தேசா என்பவர் ஆட்சி செய்தார். தனது நாட்டில் வசித்த அராபியர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் அனைவருடனும் அரசன் நல்லுறவு கொண்டிருந்தார். முத்தேசா இறந்தப்பின் இளவரசர் வாங்கா அரசரானார். தனது ஆட்சி பகுதியிலுள்ள மறைபணியாளர்களை வதைத்தார். ஒராண்டுக்குள் ஜோசப் ருகாராமா, மார்க் ககும்பா மற்றும் நோவா சர்வாங்கா ஆகிய 3 கிறிஸ்தவ பணியாளர்கள் மறைசாட்சிகளாக இறந்தனர். ஆங்கிலிகன் ஆயர் ஜேம்ஸ் ஹன்னிங்டன் என்பவரையும் கொலை செய்தனர். கிறிஸ்துவின் பொருட்டு எண்ணற்ற பணியாளர்கள் கொலையுண்டனர். 1886, ஜøன் 3ஆம் நாள் 26 பேர் மறைசாட்சியாக இறந்தனர். 45 பேருக்கு மேல் கிறிஸ்துவை அரசராக ஏற்றதால் இரத்தம் சிந்தி இறந்தனர்.
Thursday, 3 June 2021
உகாண்டா மறைசாட்சிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment